தலைவாசல்: தலைவாசல் அருகே, கிணற்றில் விழுந்த பெண்ணின் உடலை மீட்பதில், தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தவர் சாந்தி, 50. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் அங்குள்ள பொது கிணற்றில் விழுந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி சாந்தியின் உடலை தேடினர். ஆனால், கிணற்றில் நீர் அதிகளவு இருப்பதால், உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் மாலை நேரமாகி விட, இருட்ட தொடங்கியதால், உடலை தேடும் பணியை நிறுத்தினர். இந்நிலையில், நேற்று மீண்டும், சாந்தியின் உடலை தேடும் பணி தொடங்கியது. ஆனால், அவரது உடலை மீட்க முடியவில்லை. தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE