தர்மபுரி: தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தேங்கும் மண் சகதியால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பைபாஸ் பகுதியில் இருந்து, மணிக்கட்டியூர் சாலை வரை, சாலையோரம் அதிகளவில் மண் தேங்கியது. இந்த மண், தார்ச்சாலை வரை தேங்கியதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து, அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் ?தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், இந்த மண் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இந்த சேற்றில் சிக்கி மீண்டும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி, இங்குள்ள மண் மற்றும் சேற்றை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE