கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள எம்.சி.பள்ளியை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 50, டிராக்டர் டிரைவர்; இவர், பர்கூர் அருகே உள்ள அழகியபுதூரில் டிராக்டர் ஓட்டிக்கொண்டு, அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம், அழகியபுதூரை சேர்ந்த நாராயணன் வீட்டின் அருகிலுள்ள விவசாய கிணற்றின் அருகே அவர் நடந்து சென்றபோது, தவறி கிணற்றில் விழுந்தார். 50 அடி ஆழ கிணற்றில், 35 அடி வரை தண்ணீர் இருந்ததால், தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE