புதுக்கோட்டை: அரசு மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சீட்டின் பின்பக்கம், அ.தி.மு.க., சின்னம் இருந்ததால், தி.மு.க.,வினர், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தினமும் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களாக, இந்த மருத்துவமனையில், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சீட்டின் பின்பக்கம், அ.தி.மு.க., சின்னம் இருந்துள்ளது. இதை பார்த்த தி.மு.க.,வினர், நேற்று, மருத்துவமனையை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் விசாரித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது: அரசு சார்பில் வழங்கப்படும், புறநோயாளிகளுக்கான சீட்டுகள், பல நாட்களாக மழையூர் அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. அதனால், கறம்பக்குடியில் உள்ள ஒரு அச்சகத்தில், இலவசமாக, 'ஒன்சைடு' சீட்டு வாங்கப்பட்டது. அதில், கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அச்சடிக்கப்பட்ட, அ.தி.மு.க., சின்னம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., வினர் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE