பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 7,200 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 7,200 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE