நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. கடந்த, ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் கடந்த, 2ல் திறக்கப்பட்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கின. தொடர்ந்து, நேற்று, அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பம், பொறியியல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய, வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்ததால், அதற்கேற்ப மாணவ, மாணவியர் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியில் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், 780 மாணவியர் வந்திருந்ததர். அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கல்லூரிகளுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், 'இன்ப்ரா ரெட் தெர்மா மீட்டர்' முலம் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE