கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வெண்டைக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்தன. கிருஷ்ணராயபுரம் ஒன்றிம், புதுப்பட்டி, தாதகவுண்டப்பட்டி, மகிளிப்பட்டி, பஞ்சப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில், விவசாயிகள் பரவலாக காய்கறிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால், வெண்டைக்காய் செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் பிடித்து அதிகமான காய்கள் காய்த்து வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்து, கரூர் உழவர் சந்தை மற்றும் உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE