குளித்தலை: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., சார்பில் பேரணி நடந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என, வலியுறுத்தியும், கரூர் மாவட்டம், தோகைமலை வட்டார காங்., சார்பாக, ஏர் கலப்பை பேரணி நடந்தது. வட்டார தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். எம்.பி., ஜோதிமணி, திருச்சி வேலுசாமி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். காவல்காரன்பட்டியில் பேரணி தொடங்கியது. பஸ் நிறுத்தம் அருகே பேரணி குறித்து ஒலி பெருக்கியில் பேசுவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த எம்.பி., ஜோதிமணி உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி -தோகைமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், பேசுவற்கு போலீசார் அனுமதி அளித்தனர். மாவட்ட தலைவர் சின்னசாமி, துணை தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE