ஜமுனாமரத்துார் : பாதிரியார் கடத்தி சென்ற தன் மகளை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ஜெயராஜ் 49 பாதிரியார்; இவர் ஜவ்வாதுமலை பெருங்காட்டூரில் தங்கி மதபோதனையும் மாணவியருக்கு டியூஷனும் நடத்தி வந்தார். கடந்த அக் 24ல் 9ம் வகுப்பு மாணவியை பாதிரியார் ஜெயராஜ் கடத்திச்சென்றார்.இது குறித்து மாணவியின் தந்தை புகார்படி ஜமுனாமரத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாதிரியார் மொபைல்போன் பயன்படுத்தாமல் உள்ளதால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடத்தி செல்லப்பட்ட தன் மகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறுமியின் தந்தை மனு அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE