குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியானார். குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்தில், பவானியில் இருந்து குமாரபாளையத்திற்கு, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சைக்கிளில் நேற்று முன்தினம் காலை, 8:50 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பவானி பக்கமிருந்து வேகமாக டாரஸ் லாரி, சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயம்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, போடிநாயக்கனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் திருமலைக்கண்ணனை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இறந்தவர், ஈரோடு மாவட்டம், நசியனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி, 46, என்பது தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE