நாகப்பட்டினம்: 'நிவர்' புயல் காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நவ., 23ம் தேதி முதல், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்தது. தொடர்ந்து, 'புரெவி' புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தற்போது, கடல் சீற்றம் குறைந்த நிலையில், 15 நாட்களுக்கு பின், நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகு, 6,000 பைபர் படகுகளில், ஒரு லட்சம் மீனவர்கள், நேற்று முதல் மீன் பிடிக்க சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE