கமுதி : கமுதி அருகே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாககுடிநீர் கிடைக்காமல் மக்கள் ஊரணி தண்ணீரை குடித்து வருகின்றனர்.
கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பாப்பங்குளம் ஊராட்சியில் செந்தனேந்தல், கே.பாப்பங்குளம், சீமனேந்தல், பூமாவிலங்கை கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கே.பாப்பங்குளம் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு வசதியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.தொட்டியை மராமத்து செய்யாததால் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது.
கிராம மக்கள் கூறியதாவது:ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர்தொட்டிகள் காட்சிப் பொருளாக இருப்பதால் வேறுவழியின்றி கிராமமக்கள் அத்தியாவசிய தேவைக்காக ஊரணி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் டிராக்டரில் வரும் தண்ணீரை குடம் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். கிராமத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE