விருத்தாசலம் : மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை கண்டித்து, விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயுஷ் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வழிவகை செய்யும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் டாக்டர் நவநீதம், செயலாளர் சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் குலோத்துங்கசோழன், கோவிந்தமுருகன், சிவசுப்ரமணியம், கோகுலகிருஷ்ணன் உட்பட அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பங்கேற்றனர்.
வரும் 11ம் தேதி அகில இந்திய அளவில் 12 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE