திருப்புல்லாணி : வாஷ் தொண்டு நிறுவனம் சார்பில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குஉட்பட்ட, 25 அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சுகாதார விழிப்புணர்வு குறித்த பயிற்சி நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் லிங்கன் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து பயிற்சிகள், குறிப்பேடு பதிவுகளை வழங்கினார்.பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பது, மாணவர்களின் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுகாதாரப் பயிற்சியாளர்கள் தினேஷ், நளினி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE