கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி முருகன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஜெ.,பேரவைச் செயலாளர் ஞானவேல், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்க பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி, ஜெ.,பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் குமரகுரு, பிரபு ஆகியோர் ஜெ., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வரதன், பழனிவேல், செல்வராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் நாராயணன், முத்துராமன், கஜேந்திரமணி, சுரேஷ், சுபாஷ், ஒன்றிய தகவல் தொழிநுட்ப பிரிவு செயலாளர் ஜனார்த்தனன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE