விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில், வரும் 12ம் தேதி மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி இளவழகன் செய்திக்குறிப்பு;தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் 12ம் தேதி மக்கள் நீதிமன்றம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடக்கிறது.நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடக்கிறது.
சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டுவரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்காளிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீட்டு தொகை, பிற பிரச்னைகளை இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE