வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றி யத்தில், 61 ஊராட்சிகள்உள்ளன. இவற்றில், அதிக மக்கள் தொகை வசிக்கும் இலுப்பப்பட்டு, கோவிந்தவாடி உள்ளிட்ட பல ஊராட்சிகளுக்கு, ஆர்.ஓ., என அழைக்கப்படும், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மையத்திற்கும், தலா, 6.80 லட்சம் ரூபாய் என, 80.60 லட்சம் ரூபாயில், 12 இடங்களில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை தெரிவிக்கிறது.ஆனால், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் குழாய்கள் பொருத்தப்படாததால், இம்மையம் பயன்பாட்டுக்கு வராமல், 35 ரூபாய் கொடுத்து, தனியாரிடம் கேன் குடிநீர் வாங்க வேண்டியுள்ளதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், முறையாக ஆய்வு செய்து, ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள்செயல்பட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.காஞ்சிபுரம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராஜசேகர் கூறுகையில், ''மாவட்ட ஊரக வளர்ச்சி நிதியில், சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செயல்படாதவை, விரைவில் சரிசெய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE