திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பெண் இறந்தார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நசீர் மகன் முகமது ஆரிப், 28; டிரைவர்.இவர் நேற்று முன்தினம் காலை தென்காசியிலிருந்து - சென்னைக்கு டவேரோ காரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் காலை 6.45 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கல்வெர்ட் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்து நீரில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த முகமது சுல்தான் மனைவி நஸ்ரின், 22; ரகீம் மகன் ரஷீத், 10; அஜித் மனைவி நிஷா, 25; உட்பட 12 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த திருவெண்ணெய் நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது சுல்தான் மனைவி நஸ்ரின், 22; நேற்று பகல் 2:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE