விழுப்புரம் : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 920 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு, ஆதரவு தெரிவித்து விழுப்புரம் காந்தி சிலை அருகே நேற்று தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சிவா, மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் லட்சுமணன், காங்., மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன், மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு, கலைந்து சென்றனர். இதேபோன்று, மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 920 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால், விழுப்புரம் நகரில் மெடிக்கல், பெட்ரோல் பங்க்குகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன. இதனால், நகரம் முழுதும் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.கைது இல்லைவிழுப்புரம் காந்தி சிலை முன் தி.மு.க., கூட்டணி கட்சியினர், சாலையை மறித்து அரை மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததால், அரசியல் கட்சி யினர் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE