ஸ்ரீபெரும்புதுார் : கன மழையால், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அச்சம்அடைந்துள்ளனர்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தால், ஏற்கனவே விபத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கன மழை காரணமாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலம் முதல் சுங்குவார்சத்திரம் அடுத்த பிள்ளைசத்திரம் வரை, பல இடங்களில் சேதமாகி, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த பள்ளங்களால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவில் இருள் சூழ்ந்துள்ளது.'இந்நிலையில், கன மழையால் சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியில் செல்லவே அச்சமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE