திண்டிவனம் : திண்டிவனம் அருகே இருளர் குடிசைகளுக்கு தனியார் அமைப்பு மூலம் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே ஒலக்கூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் நான்கு இருளர் குடும்பங்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மின் விளக்கு உள்ளிட்ட போதிய அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இருளர் குடும்பங்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்டெப்ஸ் அமைப்பின் சார்பில் நான்கு இருளர் குடும்பங்களுக்கு சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,கணேசன், சோலர் மின் விளக்கை இயக்கி வைத்தார். இதையொட்டி இருளர் குடும்பங்களுக்கு உணவு மற்றும் தலா 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில், ஸ்டெப்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜேஷ், வெங்கட சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் பூபால், ரத்தினம் மற்றும் மணிகண்டன், வெள்ளைச்சாமி,மோகன் சுப்பிரமணி, சோலார் பொறியாளர் பிரபு, இராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE