திண்டிவனம் : வேலை நிறுத்த போராட்டத்திற்கு போதுமான ஆதரவு இல்லாததால் திண்டிவனத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தன.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது. வேலை நிறுத்த போராட்டத்திற்கு போதுமான ஆதரவு இல்லாததால், திண்டிவனத்தில் அனைத்து கடைகள், வர்த்த நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. அதே போல் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் வழக்கம் போல் இயங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE