வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில், ராஜகுளம் - முத்தியால்பேட்டை புறவழியை இணைக்க, இணைப்பு சாலை உள்ளது.இதன் ஓரமாக, நத்தப்பேட்டை ஏரியில் இருந்து, வையாவூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் செல்கிறது. சமீபத்தில் பெய்த கன மழை நீர், கால்வாயை மீறி, காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் ஓடியதால், சாலையில் அரிப்பு ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறையினர், நேற்று, ஜல்லிக்கற்கள் கொட்டி, சாலையை தற்காலிகமாக சீர்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE