பொதட்டூர்பேட்டை : ஐந்து ஆண்டுகளுக்கு பின் நிரம்ப உள்ள ஏரியை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்காணித்து வருகின்றனர். உபரிநீர் வெளியேற, கலங்கல் பகுதியும் முன்னெச்சரிக்கையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
பொதட்டூர்பேட்டை ஏரி, அவ்வளவு எளிதாக நிரம்புவது இல்லை. அருகில் உள்ள பாண்டர வேடு, அத்திமாஞ்சேரிபேட்டை ஏரிகள், ஆண்டுதோறும் நிரம்பினாலும், நடுவே அமைந்துள்ள பொதட்டூர்பேட்டை ஏரி, நிரம்புவது இல்லை.
இந்நிலையில், அடுத்தடுத்த புயல்களின் தாக்கத்தால், பொதட்டூர் ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்து வருகிறது.ஏரியின் நீர்மட்டத்தை, தினமும் பார்வையிட்டு வரும் பொதுமக்கள், விரைவில் முழு கொள்ளளவு எட்டப்பட்டுவிடும் என, ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், புதர்மண்டி கிடந்த கலங்கல் பகுதியையும், மதகையும் பொதுப்பணித் துறையினர், சமீபத்தில் சீரமைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE