ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அடுத்த, ஆரணி, மச்ச தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 52. சைக்கிள் ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு, மனைவி லலிதா, மகன் மோகன், 23, மகள் பாரதி, 21, உள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன், சைக்கிள் கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.நேற்று, ஆரணி ஆற்றின் கரையில், ஒருவர் பிணமாக கிடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து விசாரித்ததில், காணாமல் போன மனோகரன் என்பது தெரிய வந்தது. ஆரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE