திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மா பேட்டையில் இருந்து, அரிச்சந்திராபுரம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.இதையடுத்து, திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம், மேற்கண்ட சாலை, 1.7 கி.மீட்டர் துாரத்திற்கு தார்ச்சாலையாக மாற்றுவதற்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, சின்னம்மாபேட்டை - அரிச்சந்திராபுரம் இடையே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை, நேற்று ஒன்றிய சேர்மன் ஜீவா பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.பின், தார்ச்சாலைப் பணிகளை இம்மாதத்திற்குள் போட்டு பயன்பாட்டிற்கு விட வேண்டும் எனவும், ஒன்றிய குழுத் தலைவர் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியின் போது, ஊராட்சி தலைவர் நிர்மலா உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE