மீஞ்சூர் : ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் பெறப்பட்ட ஆர்.சி., லைசென்ஸ் உள்ளிட்டவையைத் திரும்ப கொடுப்பதில் போலீசார் அலைக்கழிப்பதால், வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா ஊரடங்கின்போது, தடையை மீறி வெளியில் சுற்றிய, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்கள், அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.அதே சமயம், வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்ட லைசென்ஸ், ஆர்.சி., புக் உள்ளிட்டவை திரும்ப ஒப்படைப்பதில் போலீசார் அலைகழித்து வருகின்றனர்.
மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் என, பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகன ஓட்டிகள் தினமும், காவல் நிலையத்திற்கு வந்து ஆவணங்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.போலீசார், இன்று, நாளை என, அலைகழித்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.காலாவதி ஆகும் நிலையில் உள்ள லைசென்ஸ்களை புதுப்பிக்க முடியாமலும், ஆர்.சி., இல்லாமல், வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்ட ஆவணங்களை விரைவாக திரும்ப வழங்க சிறப்பு முகாம்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE