சென்னை:கொரோனா தொற்று காரணமாக, நடிகர் சரத்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனருமான சரத்குமார், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றார். அங்கு அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து, நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது: ஐதராபாதில் சரத்குமாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் பாதுகாப்பில், அவர் நல்ல நிலையில் உள்ளார். வரும் நாட்களில், அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, 'அப்பாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் இருந்து, அவர் மீண்டு வருகிறார்' என, கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE