புழல் : புழல் சிறை, சமையல் அறையை சுத்தம் செய்வது தொடர்பான பிரச்னையில், கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், வெளிநாட்டு கைதி தாக்கப்பட்டார்.
சென்னை, புழல் மத்திய சிறையில், 2015ல் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, ஆப்ரிக்காவில் உள்ள, 'கானா' நாட்டைச் சேர்ந்த கும்முடி எபிநேசர், 40, என்பவர், தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.அங்கு, போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய, இலங்கையைச் சேர்ந்த முருகன், 38, என்ற கைதியும் உள்ளார்.சிறையில் உள்ள சமையல் அறையை, ஒவ்வொரு நாளும், ஒரு கைதி சுத்தம் செய்ய வேண்டும்.
அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை, முருகன், சமையல் அறையை சுத்தம் செய்யவில்லை. இதனால், அவரை, கும்முடி எபிநேசர் கண்டித்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது.
அப்போது, முருகன், எபிநேசரை சரமாரியாக தாக்கினார். பலத்த காயமடைந்த எபிநேசர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.'போக்சோ' கைதி பலி!சென்னை, கொண்டித்தோப்பு, வெங்கு தெருவில் வசித்தவர் கிரண்குமார், 39. 'போக்சோ'வில் கைதாகி, 2018ம் ஆண்டு முதல், புழல் சிறையில் தண்டனை கைதியாக இருந்தார்.
சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலை, 3:30 மணி அளவில், அவரது உடல் நிலை மோசமாகி, சுயநினைவை இழந்தார். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 5:00 மணி அளவில் உயிரிழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE