திருவேற்காடு : திருவேற்காடில், கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவேற்காடு போலீசார், நேற்று முன் தினம் இரவு, கோலடி சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூளைமேடு, அவ்வையார் நகர், நேரு தெருவைச் சேர்ந்த சுரேஷ், 43. திருவேற்காடு, அன்பு நகர், ஒன்பதாவது தெருவைச் சேர்ந்த சீனு பிரசாந்த், 35, ஆகியோர் வந்த, ஆட்டோவை சோதனையிட்டனர்.அதில், பயணியர் இருக்கைக்கு கீழே, 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. அவர்கள், திருவள்ளூரில் இருந்து, கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா, ஆட்டோ மற்றும் 3,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE