ராஜமங்கலம் : ராஜமங்கலத்தில் கார் மோதியதில், நான்கு மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பெண் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வில்லிவாக்கம், ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன், 32; கடை ஊழியர். இவரது மனைவி கவுசிபீ, 26; நான்கு மாத கர்ப்பிணி.இவர், மக்காரம்தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்த கணவரிடம், 'ஸ்கேன் ரிப்போர்ட்'டை காண்பித்து விட்டு, டூ - வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.ரங்கதாஸ் காலனி, பிரதான சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று மோதியது. இதில், கவுசிபீ சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.காரை ஓட்டிய, வருமான வரித்துறையைச் சேர்ந்த பெண், அங்கிருந்து தப்பினார்.இது குறித்து, வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE