மயிலாப்பூர் : ஒரே கடையில், இரண்டு முறை மர்ம நபர்கள், கைவரிசை காட்டியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, மயிலாப்பூர், ஆலிவர் சாலையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 36. இவர், அதே பகுதியில், குளர்பான கடை வைத்துள்ளார்.நேற்று காலை, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
கடந்த மாதம், 16ம் தேதி, இதே கடையின் பூட்டை உடைக்கப்பட்டு, 3,000 ரூபாய் மற்றும் பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE