சென்னை : மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையத்தில், 'சர்வர்' பிரச்னை காரணமாக, மின் கட்டணம் செலுத்த முடியாமல், நுகர்வோர் சிரமப்பட்டனர்.
சென்னை, அண்ணா சாலையில், மின் வாரிய வளாகம் உள்ளது. அங்கு, மின் வாரிய தலைமை அலுவலகம், மின் கட்டண வசூல் மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.அந்த வசூல் மையத்தில், பலரும், ரொக்க பணம், காசோலை வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்துகின்றனர்.அங்கு, நேற்று மதியம், பலரும் மின் கட்டணம் செலுத்த வந்து, வரிசையில் காத்திருந்தனர்.
மதியம், 1:30 மணி முதல், 'சர்வர்' பிரச்னை காரணமாக, மின் கட்டண மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் இயங்கவில்லை. இதனால், ஊழியரால், கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. மின் கட்டணத்தை செலுத்த வந்தோர், அதிக நேரம் காத்திருந்தும், கட்டணம் செலுத்த முடியவில்லை. பலர், திரும்பி சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE