சென்னை:தமிழக விவசாயிகள், 38 லட்சம் பேருக்கு, மூன்றாவது தவணையாக, பிரதமரின் விவசாய உதவித்தொகை, விரைவில் வழங்கப்பட உள்ளது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், 44 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப் பட்டனர். இதில், விவசாயிகள் அல்லாதோர் பலர் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். விவசாயிகள் அல்லாதோரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பயனாளிகள் பட்டியலை சரிபார்த்த வேளாண் துறையினர், விவசாயிகள் அல்லாத ஆறு லட்சம் பேரை பட்டி யலில் இருந்து நீக்கினர். மீதமுள்ள, 38 லட்சம் பயனாளிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, மூன்றா வது தவணை நிதியை விடுவிக்கும் பணியை, மத்திய அரசு தற்போது துவங்கியுள்ளது.அதன்படி, தமிழக விவசாயிகளின் வங்கி கணக்குகளில், விரைவில், 700 கோடி ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில், வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE