மூணாறு: கேரள மாநிலம், மூணாறு அருகே, சிலந்தியாறு
பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ்; மகன் மனோஜ்குமார், 28, பெங்களூரில்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு, 'டூ - வீலர்' விபத்தில்
நேற்று இறந்தார். இதையறிந்து சுந்தரராஜ், உறவினர்களுடன் பெங்களூருக்கு
ஜீப்பில் புறப்பட்டார்.வீட்டில் இருந்து ஜீப் சிறிது துாரம் சென்றபோது,
சுந்தரராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கோவிலுார் ஊர்காடு தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE