சேலம்:சேலத்தில், திருட்டு கும்பலில் சிக்கிய இருவரை விடுவிப்பதாக கூறி, அதிகாரிகள் பெயரில், வசூல் வேட்டையில் ஈடுபட்ட, காங்., நிர்வாகிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
'புல்லட்' திருட்டு வழக்கில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த, அபின், 19; ஆகாஷ், 19 உட்பட ஆறு பேரை, சேலம் பள்ளப்பட்டி போலீசார் அக்., 6ல் கைது செய்தனர்.அபின், ஆகாஷ் ஆகியோரை விடுவிக்கும் முயற்சியில், அவரது பெற்றோர் இறங்கினர்.இதற்காக, ஓசூரைச் சேர்ந்த மாவட்ட, காங்., தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவின் தலைவர் சந்திரசேகர், 26, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, மொபைல் கடை நடத்தி வரும், காங்., முன்னாள் மாவட்ட பொதுச் செயலர் சரவணன், 43, ஆகியோரை அணுகினர்.
அபின், ஆகாஷ் ஆகியோரின் தந்தையரான பிரதீப், 47, சீனி, 42, ஆகியோரிடம், இருவரும், மாநகர போலீஸ் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால், இருவரையும் விடுவிப்பதாக தெரிவித்தனர்.இதை நம்பி இருவரும், 6 லட்சம் ரூபாய் கொடுத்தனர். ஆனால், இருவரையும் விடுவிக்கவில்லை. நேற்று முன்தினம், பிரதீப், சீனி, சரவணனிடம் பணம் கேட்ட போது, அவர் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரதீப், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம், ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி, சரவணன், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்து, 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE