கோவை:அரசியல் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதை,தி.மு.க., நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., எச்சரித்துள்ளது.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் குற்றச்சாட்டுக்காகசிறை சென்ற, தி.மு.க., துணைப் பொது செயலாளர் ராஜா, அரசியலில் பண்பாடு, நாகரிகம் இல்லாமல் தரக்குறைவாக பேசியதை, வன்மையாக கண்டிக்கிறோம்.
முதல்வர் பழனிசாமி அற்புதமாக ஆட்சி செய்து வருகிறார். இதனால், தங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்பதால், மிகவும் மோசமாக, கேவலமாக பேசுவதை, தி.மு.க.,வினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.அரசியல் நாகரீகம் இல்லாமல் செயல்படுவதை, தி.மு.க., நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் தக்க பதிலடி தரவேண்டியிருக்கும். மோசமான வார்த்கைகள் தொடர்ந்தால், ஸ்டாலினை கோவையில் நடமாட விடமாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE