தேனி,:தேனி மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி, 29. இவர், 'டிக் -டாக்' வீடியோ மூலம் பிரபலமடைந்தார்.
தஞ்சை மாவட்டம், கரந்தையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா, 35, ஆண் நண்பர்கள் நான்கு பேர் ஆலோசனைப்படி, சுகந்தியின் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, குரலை மாற்றிப் பேசி பதிவு செய்தார். பின், சுகந்தியின் தந்தை, சகோதரி, அவரது மகள்கள்ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, 'பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முகவரியுடன் பதிவேற்றம் செய்து, ஆபாசமாக சித்தரித்துள்ளார்.சுகந்தி புகாரின்படி, பழனிச்செட்டிபட்டி போலீசார், திவ்யாவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE