கோவை:இடைநிற்றல் குறைக்க பெரிதும் கைக்கொடுத்த, 'ஸ்கோப்' திட்டத்தை, பள்ளிகளில் துவங்கும் வகையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி, நேற்று ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம், மேல்நிலை வகுப்பில் இடைநிற்றல் குறைக்கும் வகையில், 2018 முதல், ஸ்கோப் (specific concept oriented program) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட, ஏழு பாடங்களுக்கு, மாணவர்களை குழுவாக உருவாக்கி, குறிப்பிட்ட தலைப்பின் கீழ், செயல்திட்டங்கள் உருவாக்க வேண்டும்.ஒரு குழுவில் ஐந்து பேர் வீதம், ஒரு பள்ளியில், ஏழு பாடங்களுக்கும் சேர்த்து, 35 மாணவர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் உருவாக்கும் செயல்திட்டம், மாவட்ட, மாநில, தேசிய அளவில் காட்சிப்படுத்தப்படுவதோடு, சிறந்த படைப்பிற்கு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், இத்திட்டத்திற்கு 10 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பாட ஆசிரியர்களுக்கு, செயல்திட்டங்கள் உருவாக்குதல், மாணவர்களை கள ஆய்வில் ஈடுபடுத்துதல், குழு உருவாக்குதல் குறித்த பயிற்சி, ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.ஆன்லைன் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து, செயல்திட்டங்கள் தயாரிக்க, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE