கோவை:கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில், சித்தாபுதுாரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள, வேளாண் சட்டத்திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மத்திய அரசை தீர்வுகாண வலியுறுத்த வேண்டும். விவசாயிகளை அழைத்து பேசி மத்திய அரசு சுமூக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE