தேக்கடி:பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டு உள்ள நீரின் அளவு 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று காலை 8:30 மணிப்படி பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 25.6, பெரியாறில் 2.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து 2103 கன அடியில் இருந்து வினாடிக்கு 2771 கன அடியாக அதிகரித்தது. அதன் காரணமாக தமிழகப்பகுதிக்கு திறந்துவிடும் நீரின் அளவும் 1290 கன அடியில் இருந்து 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம் 125.20 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.
நீர் இருப்பு 3661 மில்லியன் கன அடி. நேற்று பகல் மழை பெய்யவில்லை.தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி 114 ல் இருந்து 126 மெகாவாட்டாக அதிகரித்தது. முதல் மூன்று ஜெனரேட்டர்களில் தலா 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நான்காவது ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE