கோவை:கோவையில், நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு மாடி கட்டடம் ஏலமிடப்படுகிறது.கோவையில் செயல்பட்டு வந்த ராமகிருஷ்ணா சிட்பண்ட் நிறுவனம், மோசடி செய்த வழக்கில், அந்நிறுவனத்தின் சொத்துக்கள் இடைமுடக்கம் செய்யப்பட்டன.இந்த சொத்துக்களை ஏலமிட, கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, கோவை தெற்கு தாலுகா பகுதிக்கு உட்பட்ட, ரங்கே கவுடர் வீதியிலுள்ள, நிதி நிறுவனத்துக்கு சொந்தமான, 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு அடுக்கு மாடி கட்டடம் ஏலம் விடப்படுகிறது.மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் 16ம் தேதி, காலை 11:30 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஏலம் நடைபெறும்.ஏலம் கோர விரும்புவோர், ஏலமிடும் தேதிக்கு முன், அது தொடர்பாக சந்தேகங்களை , மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு, நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE