சென்னை:துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பல்வேறு ஆவணங்களை பல்கலை பதிவாளர் தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா நிர்வாகத்தில் பணி நியமனம் 'டெண்டர்' உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சுரப்பா நிர்வாக காலத்தில் நடந்த விவகாரங்கள் குறித்த தணிக்கை மற்றும் கணக்கு விபரங்களை தாக்கல் செய்யுமாறு பல்கலை பதிவாளர் கருணாமூர்த்திக்கு ஆணையம் 'சம்மன்' அனுப்பியிருந்தது.அதனால் பதிவாளர் தன் அலுவலக ஊழியர்களுடன் நேற்று விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். அப்போது பல்கலை தொடர்பான முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE