கோவை:ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவையை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவராக இருப்பவர் இப்ராஹிம். இவருக்கு மர்மநபர் ஒருவர், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இப்ராஹிம் திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த சோழவரம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், இப்ராஹிமிற்கு கொலை மிரட்டல் விடுத்த அழைப்பு கோவையில் இருந்து வந்தது தெரிந்தது. இதையடுத்து சோழவரம் போலீசார், கோவை வெள்ளலுார் அருகே உள்ள மகாலிங்கபுரம் குடிசை மாற்று வாரிய வீட்டில் குடியிருந்து வரும் நகைக்கடை ஊழியரான முகமது ஆரீஸ், 23, என்பவரை கைது செய்தனர். அவரை சோழவரம் அழைத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE