கோவை:கோவையில் இரண்டு வீடுகளில் புகுந்து, 31 சவரன் நகை மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை, சின்னவேடம்பட்டி அருகேயுள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சரவணன்,41. கடந்த 29ல், திருச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.வீட்டிற்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், 42 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டுக்குள் நான்கு பேர் கும்பல் புகுந்தது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
ரத்னபுரி, கண்ணப்பன் நகர் அருகேயுள்ள தயிர்இட்டேரியை சேர்ந்தவர் பிரிட்டான் பில்தா, 24. ஒர்க் ஷாப் தொழிலாளியான இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள மின் மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது மர்ம ஆசாமிகள், சாவியை எடுத்து கதவை திறந்து, பீரோவை உடைத்து, ஆறரை சவரன் நகை மற்றும், 25 ஆயிரம் ரூபாய் திருடி சென்றனர். ரத்னபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE