அன்னுார்:பசுமை வீடு கோரி விண்ணப்பதாரர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அன்னுார் ஒன்றியத்தில், நடப்பாண்டில் பசுமை வீடு திட்டத்தில், 21 ஊராட்சிகளுக்கும் சேர்ந்து, 25 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கலுார் ஊராட்சியில் பசுமை வீடு கோரி, 20 பேர் விண்ணப்பித்திருந்தனர்.ஆனால், ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த விண்ணப்பதாரர்கள், ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர் ராஜாமணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'பசுமை வீட்டுக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்' என தெரிவித்தனர்.ஊராட்சி தலைவர், ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பேசி கூடுதல் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக, சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE