வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில், பரவலாக பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மழைப்பொழிவு குறைந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கை மற்றும் கால்களில் பாதுகாப்பு கவசம் அணிந்து தேயிலை பறிக்கின்றனர்.அய்யர்பாடி, சின்கோனா, கவர்க்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் மஞ்சள் சூரியகாந்தி பூக்கள் சாலையோரம் பூத்துக்குலுங்குகின்றன. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பரவலாக பூத்துக்குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE