சென்னை:பதிவுத்துறையில் நிர்வாக நடவடிக்கையாக, ஆறு மாவட்ட பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இருப்பினும், சில இடங்களில் பதிவு பணியிலும், பல இடங்களில் நிர்வாக பணியிலும், மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர்.ஊரடங்கு காரணமாக, பொது மாறுதல் நடைபெறாததால், வழக்கமான நடைமுறையில், யாருக்கும் இடமாறுதல் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள் இடமாறுதல் கோரியதில், 15 பேருக்கு மாறுதல் கிடைத்துள்ளது.இந்நிலையில், ஆறு மாவட்ட பதிவாளர்களை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய சென்னை, நாமக்கல், திருவண்ணாமலை, செய்யார், கோவை, மதுரை மாவட்ட பதிவாளர்கள் மாற்றப்பட்டுஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE