கோவை:கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 112 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் புதிதாக, 122 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 65 மூதாட்டி நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 622 ஆக உயர்ந்தது.
அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 112 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 48 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE