ஊட்டி:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய சாட்சியிடம், ஆறாவது முறையாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் உட்பட, 3 பேர் நேற்று ஆஜராகினர். ஏழு பேர் ஆஜராகவில்லை. குறுக்கு விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த பஞ்ச புஷ்பகர்மா, கிருஷ்ணதாபா, சுனில் தாபா ஆகியோர் அழைக்கப்பட்டனர்.அதில், பஞ்ச புஷ்பகர்மாவிடம் ஆறாவது முறையாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. மற்ற இருவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. அரசு தரப்பில், சென்னை ஐகோர்ட் வக்கீல் பழனிசாமி நேற்று ஆஜரானார். வழக்கை நீதிபதி வடமலை, 10ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE